ரச்சிதா பக்கத்தில் உட்கார்ந்ததும்.. பைங்கிளிகள்தான் போங்க.. ஆர்.வி.உதயகுமார் இப்படி சொல்றாரே

ரச்சிதா பக்கத்தில் உட்கார்ந்ததும்.. பைங்கிளிகள்தான் போங்க.. ஆர்.வி.உதயகுமார் இப்படி சொல்றாரே

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் குறித்து மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி. உதயகுமார் பேசிய விஷயம் பலரிடம் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சின்னத்திரையில் நடிப்பு பயணத்தை தொடங்கிய ரச்சிதா மகாலட்சுமி; அதில் பெரிய அளவில் ஃபேமஸ் ஆனார். அவரை சின்னத்திரை சாவித்திரி என்றுகூட பலர் சொல்லியதுண்டு. பல சேனல்களில் பணியாற்றி தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் சென்று சேர்ந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அதில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடிய அவர்; பாதியில் எவிக்ட் ஆனார்.

R V Udayakumar s Remarks About Rachitha Mahalakshmi Spark Criticism Online

சினிமாவில் பிஸி: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு சினிமா வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அதன்படி ஃபயர் என்ற படத்தில் நடித்தார். பிக்பாஸ் பாலாஜி ஹீரோவாக நடித்த அப்படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அத்தனை பேரும் கிளாமரை அதில் காட்டியிருந்தாலும்; ரச்சிதாவின் கிளாமர் மட்டும்தான் பெரிய பேசுபொருளானது. பணத்துக்காகத்தான் அவர் இந்த அளவுக்கு இறங்கிவிட்டார் என்று பலர் கூறினார்கள். ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.

திருமண முறிவு: இதற்கிடையே சேனல்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது.மீண்டும் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என தினேஷ் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். ஆனால் ரச்சிதா தரப்பிலிருந்து அதற்கு பாசிட்டிவ் சிக்னல்கள் எதுவும் வரவில்லை. இப்போது அவர் சிங்கிளாகவே இருக்கிறார்.

ஆர்.வி.உதயகுமார் பேச்சு: அடுத்ததாக ரச்சிதாவின் நடிப்பில் மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அவர்.அவருடன் யாஷிகா ஆனந்த், மூத்த இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி. உதயகுமாரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய உதயகுமார், "ரச்சிதா மகாலட்சுமியை எப்போதுமே நான் பாராட்டிக்கொண்டே இருப்பேன். அதை பார்த்து மற்றவர்களுக்கு பொறாமைகூட ஏற்படும்.

எனக்கு ஒரே ஸ்ட்ரெஸ். ஆனால் அவர்கள் பக்கத்தில் அமர்ந்த பிறகு அத்தனையும் பறந்துவிட்டது. ஏனெனில் அவர்கள் எல்லோரும் பைங்கிளிகள்" என கூறினார். இதை பார்த்த ரசிகர்களோ, உதயகுமார் ஒரு மூத்த கலைஞராக இருந்துகொண்டு பொதுவெளியில் இப்படியா பேசுவது என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES