யாரும் செய்யாத சாதனை! முதன் முதலில் அதிக சம்பளம் வாங்கியது இவர் தான்! கடைசியில் நடந்த மோசமான சம்பவம்!
சினிமா படங்கள் ஹீரோக்களை மையமாகவே வைத்து இயங்கும் முறை காலகாலமாக இருந்து வரும் ஒன்று. நடிகருக்காகவே ஓடிய படங்கள் என்றால் பெரும் லிஸ்ட் போடலாம்.
அதிலும் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் ஸ்பெஷல் வெளியீட்டிற்கு அதிகம் போட்டி நிலவுவதுண்டு. அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்கள் கடந்த பல வருடங்களாக இதுபோல பண்டிகை சமயத்தில் வெளிவருகின்றன.
இப்போதெல்லாம் 3 நாட்கள் படம் தியேட்டரில் ஒடினாலே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என கூறுகிறார்கள். வசூல் கலெக்ஷனும் இந்த மூன்று நாட்களில் தான் அதிகம் ஈட்டப்படுகிறது.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து 3 தீபாவளிக்கு ஓடிய ஒரே படம் என்றால் ஹரி தாஸ் தாஸ். மக்கள் சூப்பர் ஸ்டார் என அன்றே கொண்டாடப்பட்ட தியாகராஜ பாகவதர் தான் அப்படியான ஒரு சாதனைக்குரியவர்.
1944 ல் வெளியான ஹரிதாஸ் படம் சென்னை பிரசிடென்சி பிராட்வே சன் தியேட்டரில் 3 தீபாவளிக்கு ஓடியது.
அந்த காலத்தில் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் இவரே.
மேலும் லட்சுமி காந்தன் என்பவரை கொலை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.