இரவில் அந்த உணர்வு வந்தால் இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சோனா..!

இரவில் அந்த உணர்வு வந்தால் இதை பண்ணிடுவேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை சோனா..!

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் மது போதைக்கு அடிமையாகி தங்களது சினிமா வாழ்க்கை சீரழித்துக்கொண்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டு மார்க்கெட் பிடித்து பின்னர் கொஞ்சம் புகழும் பணமும் உச்சத்தை தொட்டவுடன் அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அப்படித்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது சினிமா வாழ்க்கையை பாழாக்கிக்கொண்டு அடையாளம் தெரியாமல் போன பல பேர் இருக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை சோனா நடிகை. இவர் சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் கொஞ்சம் தமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார்.

குறிப்பாக மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் கோலிவுட் திரைப்படங்களில் தனது சிறந்த குத்தாட்ட பாடல்களால் புகழ்பெற்றார்.

ஒவ்வொரு படத்திலும் ஐட்டம் சாங் ஆடி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது மட்டுமல்லாமல் கவர்ச்சியான ரோல்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

2008 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் சென்னையில் ஆடை விற்பனை கடையை தொடங்கிய அதிலில் கணிசமான வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் இதனிடையே மது போதை பழக்கத்திற்கு அடிமையாகிதனது சினிமா வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு,

அடையாளம் தெரியாமல் போய்விட்டார். ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் மது போதை பழக்கத்திற்கு அடிமையானது குறித்தும்,

ஏன் அவ்வாறு செய்தேன் என்பது குறித்தும் பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது

சினிமாவில் நடிக்கும் போது எனக்கு மதுப்பழக்கமும் தொற்றிக் கொண்டது இரவு மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலையில் இருந்தேன்.

தற்பொழுது மதுப்பழக்கத்தை திறந்து விட்டு சாதாரண பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இரவு நேரங்களில் மது அருந்த வேண்டும் என்ற உணர்வு அவ்வப்போது ஏற்படும் அந்த உணர்வு வந்தால் உடனடியாக தண்ணீரை குடித்துவிட்டு படுத்து தூங்கி விடுவேன்.

கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் போது கேமரா முன்பு பயம் இருக்கக் கூடாது என்பதற்காக மது அருந்தும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது இந்நாளில் அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது.

மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் என தனக்கு இருந்த தீய பழக்கத்தை கூச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நடிகை சோனா,

அதிலிருந்து எப்படி மீண்டேன் என்றும் அப்படியான உணர்வு வந்தால் என்ன செய்வேன் என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES