சற்றும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த சிந்தாமணி, பதற்றத்தில் முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சற்றும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த சிந்தாமணி, பதற்றத்தில் முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

இத்தனை நாள் வீட்டுப் பிரச்சனையை பல வாரங்கள் ஓட்டி வந்தனர் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர். அந்த பெரிய பிரச்சனை முடிந்த உடனே இப்போது காதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சத்யா-ரேகா இருவரும் சேர கூடாது என தனது கணவர் உதவியுடன் சிந்தாமணி என்னென்னமோ செய்கிறார், ஆனால் முத்து எல்லாவற்றிற்கும் சவால் விட்டு வந்தார். சத்யா-ரேகா இருவரையும் தனது பாட்டி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், விஜயா-மனோஜ் இருவரும் வக்கீலை காண செல்கிறார்கள், அங்கு ரோஹினி ரூ. 5 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தருகிறேன் என கூறியதை சொல்கிறார்கள்.

ரோஹினி அப்படிபட்ட ஆள் இல்லையே அவள் எப்படி விவாகரத்து கொடுக்க ஒப்புக்கொண்டாள் என வக்கீல் சந்தேகப்படுகிறார். பின் ரோஹினிக்கு போன் செய்து கேட்க அவரும் ஆமாம் என்கிறார், அந்த கேப்பில் விஜயாவை மோசமாகவும் திட்டுகிறார். அடுத்து பார்வதி வீட்டிற்கு செல்கிறார் மீனா.

அங்கு தனது அம்மா வீட்டில் நடக்கும் விஷயத்தை கூறி அவர் இங்கே இருக்கட்டுமா என கேட்கிறார், அதற்கு பார்வதி எந்த தயக்கமும் இல்லாமல் உன் அம்மாவை வரச்சொல் என்கிறார்.

சற்றும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த சிந்தாமணி, பதற்றத்தில் முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial June 20 Episode

கடைசியில் முத்து மீனாவை தேடி வீட்டிற்கு வருகிறார், ஆனால் அவர் இல்லை.

 

அண்ணாமலை நானும் போன் செய்தேன் எடுக்கவில்லை என கூற முத்து மீண்டும் போன் செய்ய Switch Off என வருகிறது. இதனால் பதற்றமான முத்து பார்வதி, மீனா அம்மா என எல்லோருக்கும் போன் செய்து மீனா இருக்காளா என கேட்கிறார், அனைவரும் இங்கு இல்லை என்கிறார்கள்.

இதனால் முத்து, சிந்தாமணி வேலையாக இருக்குமோ என மிகவும் பதற்றம் அடைகிறார். முத்து மீனாவை தேடி எல்லா இடத்திற்கும் அலைகிறார், ஆனால் எங்கேயும் இவர் இல்லை.  

LATEST News

Trending News