அடியாட்களுடன் வீட்டிற்குள் புகுந்த சிந்தாமணி.. கடும் கோபத்தில் முத்து! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ
சிறகடிக்க ஆசையில் கடந்த வாரம்
சிந்தாமணியின் மகளை மருத்துவமனையிலிருந்து அழைத்து சென்று தன்னுடைய பாட்டி வீட்டில் சத்யாவுடன் தங்க வைத்துள்ளார். தன் மகளை முத்து எங்கு மறைத்து வைத்துள்ளார் என்று தெரியாமல் சிந்தாமணி குழப்பத்தில் உள்ளார்.

வரும் வாரம் புரோமோ
இந்த நிலையில், வரும் வாரத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், அடியாட்களுடன் முத்துவின் வீட்டிற்கு செல்கிறார் சிந்தாமணி. அங்கு அடியாட்களுக்கும் முத்துவின் குடும்பத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.
இதன்பின், "என் மகள் எங்கே?" என சிந்தாமணி கேட்க, "உன் மகள் எவன் கூடையோ ஓடிப்போனா இங்கு வந்து கேட்பியா?" என கூறுகிறார் விஜயா. "நான் நினைத்தால் உங்க குடும்பத்தையே இல்லாமல் செய்துவிடுவேன்" என சிந்தாமணி கூற, "ஆசைப்பட்ட இருவரை சேர்த்து வைக்கிறேன், அவ்வளவுதான்" என முத்து கூறுகிறார்.

மேலும், "நீ எனக்கு செஞ்ச துரோகத்திற்காகத்தான் இப்படியெல்லாம் அனுபவிக்கிற" என விஜயா சொல்ல, "என் மகளுக்கு எப்படி இந்த திருமணத்தை நடத்துற என்று பார்க்கிறேன்" என சவால் விடுகிறார் சிந்தாமணி. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
data-instgrm-permalink="https://www.instagram.com/p/yTQC_Pk9sKk" data-instgrm-version="14">