நிலாவை வெறுப்பேற்ற சோழன் போட்ட கியூட் நாடகம், என்ட்ரி கொடுத்த பல்லவி... அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் இப்போது கதைக்களம் கொஞ்சம் ஜாலியான கதையாகவும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடனான கதையாகவும் சென்று கொண்டிருக்கிறது.
சோழன் தன்னை ஏமாற்றி தான் திருமணம் செய்துகொண்டார் என்ற கோபத்தில் நிலா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுவிட்டார். அந்த நேரத்தில் நிலாவின் அம்மா-அப்பா விவாகரத்து செய்தி கேள்விப்பட்டு நிலாவை தங்களுடன் சென்னையில் வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆனால் நிலாவை காண நடேசன் முதல் குடும்பத்தினர் அனைவரும் அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது அவரது அம்மா-அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இன்றைய எபிசோட்
ஒரு கியூட்டான சம்பவம் நடந்தது. அதாவது நிலா-சோழன் இரவு நேரத்தில் போனில் பேசிக்கொண்டிருந்த போது நிலா சோழனை மிஸ் செய்யவில்லை என்கிறார்.
அதனால் சோழன் ஒரு பிளான் போட்டு பல்லவனை பெண் கெட்டப் போட செய்து பல்லவி என பெயர் வைத்து ரொமான்ஸ் செய்கிறார். சோழனுடன் ஒரு பெண்ணை பார்த்ததும் நிலா செம டென்ஷன் ஆகிறார்.
பின் யார் அந்த பெண் என பார்த்ததும் நிலா, சோழன், பல்லவன் 3 பேரும் இடம்பெற செம கியூட் காட்சிகள் இடம்பெறுகின்றன.