சன் டிவியின் துளசி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யார் தெரியுமா?
துளசி சீரியல்
ஒரு சீரியல் முடிந்துவிட்டது, அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையே சன் டிவி குழுவிற்கு கிடையாது.
காரணம் ஒரு சீரியல் முடிவுக்கு கொண்டு வருவதற்குள் அடுத்து இந்த சீரியல் போடலாமா, அல்லது அதுவா என செலக்ட் செய்யும் அளவிற்கு வரிசையாக புத்தம் புதிய சீரியல்களை வைத்துள்ளனர்.
அப்படி சமீபத்தில் புதிய என்ட்ரியாக துளசி என்ற சீரியல் சன் டிவியில் களமிறங்கியது. ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுக்தா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விஜய், ரம்பா, தேவயானி நடிக்க நினைத்தேன் வந்தாய் படத்தின் கதை பானியில் இந்த சீரியல் கதை உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

புதிய என்ட்ரி
கடந்த மே 11ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய நடிகர்கள் தான் உள்ளார்கள்.
தற்போது சீரியல் குறித்து என்ன தகவல் என்றால் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஸ்பெஷல் என்ட்ரியாக நடிகர் விஜய் களமிறங்க உள்ளாராம்.