ஸ்ருதி-ரவியை சிக்க வைக்க நீத்து போட்ட ஷாக்கிங் பிளான், அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் சமாளிக்கலாம், ஆனால் எந்த பக்கம் போனாலும் பிரச்சனையாக இருந்தால் எப்படி தான் சமாளிப்பார்கள்.
அப்படி பார்ப்பவர்களையே என்ன டா இது என புலம்ப வைக்கும் வகையில் சிறகடிக்க ஆசை சீரியலின் கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. வீட்டை விஜயா-மனோஜ் திருட்டுத்தனமாக அடமானம் வைக்க எல்லா பிரச்சனையும் தொடங்கியது.
ஆனால் விஜயா-மனோஜ் எந்த கவலையும் இல்லாமல் இருக்க முத்து-மீனா தான் போராடி வருகிறார்கள்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், நீத்து, ரவி-ஸ்ருதி ரெஸ்டாரன்டில் நெருக்கமாக இருப்பதை பார்த்து மிகவும் கோபப்படுகிறார். பின் திடீரென நீத்து ரெஸ்டாரன்ட் விட்டு கிளம்ப உடனே போலீஸ் உள்ளே வருகிறார்கள்.
அப்போது நீத்து விட்டுச்சென்ற பேகில் மது பாட்டில்கள் இருக்க அதனை ஸ்ருதி சோதனை செய்தபோது போலீஸ் அவரை சந்தேகப்படுகிறார்கள். Illegalஆக மது விற்கிறீர்களா என கேட்க ஸ்ருதி எங்களுடையது இல்லை என கூற போலீசார் நம்ப மறுக்கிறார்கள்.
பின் ஸ்ருதி உடனே CCTV கேமரா பார்க்க அது நீது வேலை என்பது தெளிவாக தெரிந்தது, பிரச்சனையும் முடிகிறது.

அடுத்து முத்துவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு போன் கால் வருகிறது. அதாவது வீட்டை ஏலம் விட பைனான்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போன் வர முத்து, விஜயா, அண்ணாமலை ஷாக் ஆகிறார்கள்.