பைனான்சியரை வைத்து சிந்தாமணி போட்ட அடுத்த பிளான், முத்து அதிரடி... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை உயிராக நினைக்கும் அவரது வீட்டுப் பிரச்சனை எப்போது தான் தீரும் என்பது தெரியவில்லை.
இந்த பிரச்சனையை கடந்த சில வாரங்களாக இழு இழு என இழுக்கிறார்கள். விஜயா-மனோஜ் தான் இந்த வீட்டுப் பிரச்சனைக்கு முக்கிய காரணம், ஆனால் அவர்கள் வீட்டிற்காக ஒரு உதவியும் செய்யவில்லை.

முத்து-மீனா பொறுப்பு ஏற்று பணத்திற்காகவும், வீட்டை மீட்பதற்காகவும் போராடி வருகிறார்கள், ஆனால் பிரச்சனை தீர்ந்தது போல் தெரியவில்லை.
ரவி-ஸ்ருதியும் அவர்களின் பங்கிற்கு ரெஸ்டாரன்ட் மீது லோன் போட்டு பணம் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், நண்பர் கொடுத்த யோசனையால் தனது பழைய முதலாளியை சந்திக்கிறார் முத்து. அவரிடம் உள்ள பழைய கார்களை கேட்கிறார், அதை சரிசெய்து நான் ஓட்டுகிறேன் என கூறுகிறார். அவரோ முதலில் தயங்க எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது முத்து, நீ கார்களை எடுத்துக் கொள் என்கிறார்.
அந்த பழைய கார்களை சரிசெய்து முத்து தொழில் செய்ய நம்பிக்கையாக இறங்குகிறார்.
அதேசமயம் சிந்தாமணி, பைனான்சியரை வைத்து எப்படியாவது வீட்டை வாங்க வேண்டும் என பிளான் போடுகிறார். நான் எவ்வளவோ குடைச்சல் கொடுத்தும் முத்து-மீனா திமிராகவே உள்ளார்கள்.
இரண்டு நாட்களுக்குள் பணம் கொடுத்து வீட்டை மீட்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர், அப்படி ஒன்றும் நடக்கக்கூடாது. ஏலம் விட்டே ஆகவேண்டும், அப்போது நமது ஆட்கள் மட்டுமே வர வேண்டும்.

அப்படி வீடு மட்டும் என் கைக்கு வந்தால் நான் பேசியது போல் உங்களுக்கு கமிஷன் தருகிறேன் என்கிறார்.