நந்தினிக்கு ஷாக் கொடுத்த வில்லன் ரஞ்சித்.. மாட்டிக்கொண்ட சூர்யா! மூன்று முடிச்சு இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் முன்னணி சீரியலாக தற்போது இருந்து வருகிறது மூன்று முடிச்சு சீரியல். அதில் வில்லன் ரஞ்சித் செய்த மோசமான செயல்களுக்கு ஆதாரத்தை காட்டி திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நந்தினி முயற்சித்து வருகிறார்.
கொலை செய்தது ரஞ்சித் தான் என வீடியோ ஆதாரத்துடன் அவர் புகாரும் போலீசில் கொடுக்கிறார். ஆனால் திருமண மண்டபத்துக்கு வந்து போலீஸ் சூர்யாவை பிடிக்கிறது.
வீடியோவை மாற்றிய ரஞ்சித்
அந்த வீடியோவை ரஞ்சித் மாற்றிவிட்டதால் சூர்யா கொலை செய்தது போல அதில் இருக்கிறது. அதை பார்த்து நந்தினியும் அதிர்ச்சி ஆகிறார்.
மற்றவர்களும் ஷாக் ஆகி நிற்கிறார்கள். இன்றைய ப்ரோமோ வீடியோ இதோ பாருங்க.