கடைக்கு வந்த ரோஹினிக்கு ஏற்பட்ட அசிங்கம், வீட்டை மீட்க கிடைத்த வழி... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிந்தாமணி சூழ்ச்சியால் வீட்டை விட்டு வெளியேறி அவரவர் தனித்தனியாக இருந்து வருகிறார்கள். ரவி மாமனார் வீட்டை மீட்க சொன்ன விஷயத்தை கேட்டு அண்ணாமலை முத்து ஷாக் ஆகிறார்கள்.
பிறகு அண்ணாமலை வீடு முக்கியம் தான் ஆனால் அதற்காக என் மகன்களை பிரிய வேண்டும் என்பது இல்லை. ரவி நீ மாமனாரிடம் பணம் வாங்க வேண்டாம். மீனா நீயும் உன் பதவியை விட்டு வீட்டை மீட்க வேண்டும் என்பது இல்லை.

நேர்மையான வழியில் போராடி நாம் நமது வீட்டை மீட்போம் என்கிறார்.
அடுத்து ரோஹினி ஷோரூமிற்கு வந்து மனோஜிடம் சிரித்துக்கொண்டு பேசுகிறார். அதை வீடியோவாக பார்த்த விஜயா செம கோபத்தில் ரோஹினியை கண்டபடி திட்டுகிறார். என் மகன் வாழ்க்கையை அழித்தது பத்தாதா, முகத்தில் பவுடரை பூசிக்கொண்டு இப்போது யாரை ஏமாற்ற கிளம்பிவிட்டாய்.

இப்படி மிகவும் அசிங்கமாக பேச ரோஹினி கடும் அதிர்ச்சியாகிறார். அங்கு எல்லோர் முன்னாடியு அவமானம் படுவதை நினைத்து வருந்துகிறார், மனோஜ் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.

முத்து-மீனா வீட்டுப் பிரச்சனைக்காக வக்கீலை பார்க்கிறார்கள். அவர் ஜப்தி உத்தரவை ரத்து செய்வதற்காக ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுகிறார். ஆனால் அந்த மனு தாக்கல் செய்தால் ஒரு 10 லட்சம் டெபாசிட் செய்ய சொல்வார்கள். பணம் ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்க முத்து சரி என்கிறார்.
மீனா பணத்திற்கு எங்கே செல்வது என கேட்க ஸ்வேதாவிடம் கேட்கலாம் என முத்து கூறுகிறார்.