திருமணத்தை பதிவுசெய்ய வந்த மனோஜிற்கு முத்து கொடுக்கப்போகும் ஷாக்... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை, எந்த விஷயம் செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர்.
ஆனால் அவரது மனைவி அப்படியே வேறு மாதிரி, பணம் தான் முக்கியம், தகுதியில் குறைவாக இருப்பவர்களை மதிக்கவே மாட்டார், ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றாலும் எந்த கிரிமினல் வேலையும் செய்யலாம் என்று நினைப்பவர்.
இவர்களின் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் அதிகம் நடந்ததோ இல்லையோ பிரச்சனைகள் தான் அதிகம் வந்துள்ளது.

புரொமோ
ரோஹினியை விவாகரத்து செய்ய நினைக்கும் மனோஜ் அவரை கர்ப்பமாகிவிட்டு இப்போது கனகாவை திருமணம் செய்துகொண்டார். மனோஜ் மறுமணம் செய்துகொண்ட விஷயம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை.
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோவில், மனோஜ்-கனகா தங்களது திருமணத்தை பதிவு செய்ய அலுவலகம் வருகின்றனர். அதே இடத்திற்கு முத்து-மீனா வீட்டின் வேலைக்காக வருகிறார்கள்.
அப்போது மனோஜை மீனா பார்க்க முத்துவிடமும் கூறுகிறார். அநேகமாக அடுத்த எபிசோடில் மனோஜிற்கு முத்து ஷாக் கொடுப்பார் என தெரிகிறது.