மேலாடை இல்லாமல் போட்டோஷூட்!! ரூ. 2000 கோடி போதைப்பொருள் வழக்கில் மாட்டிய நடிகை மம்தாவின் நிலை
மம்தா குல்கர்னி
1991ல் தமிழக முதலமைச்சர் ஷோபா இயக்கத்தில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மம்தா குல்கர்னி. 90களில் டாப் நடிகையாக திகழ்ந்த மம்தா, 1993ல் மாத இதழ் ஒன்றுக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார்.

அந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பல இடங்களில் இருந்து அவருக்கு கண்டனம் எழுந்து, மம்தா குல்கர்னி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. கரியரின் உச்சத்தில் இருந்தபோது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாலிவுட்டில் நடத்தை குறித்து வெளிப்படையாக விமர்சித்து பேசினார் மம்தா.
பல நியாயமான விஷயங்களை விமர்சித்தார் மம்தா. அவரின் கரியர் வீழ்ச்சிக்கு காரணமாக இதுவும் இருந்தது. இதனால் திடீரென பாலிவுட் சினிமாவில் இருந்து விலகினார. அவரது தனிப்பட்ட வாழ்வில் நடந்த பிரச்சனை, சினிமா வீழ்ச்சி, சர்வதேச குற்றவியல் நெட்வொர்க்குடன் தொடர்பு என அவரின் சினிமா விலகலுக்கு காரணமாக இருந்தது.

வெளிநாட்டுக்கு சென்ற மம்தா குல்கர்னி, போதைப்பொருள் கடத்தல்காரராக கூறப்படும் விக்கி கோஸ்வாமியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், தன் திருமண உறவு குறித்து பல கருத்துக்களை மம்தா தெரிவித்து வந்தார். 2016ல் ரூ. 2000 கோடி போதைப்பொருள் வழக்கில் அவரின் பெயரும் இடம் பெற்றது. விக்கி கோஸ்வாமியுடன் இணைந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மம்தா குல்கர்னி, நேரி ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். மம்தா தொடர்ந்து தவற் செய்ததை மறுத்ததோடு, தன் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். பொது வெளியில் விலகி இருந்த மம்தா, ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து ஆளே மாறியதை பார்த்து பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

