வீடே பிரச்சனையில் இருக்கும் போது மனோஜ்-ரோகினி செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல்

வீடே பிரச்சனையில் இருக்கும் போது மனோஜ்-ரோகினி செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் அடுத்து என்ன நடக்கும், எப்போது பிரச்சனை முடியும் என ரசிகர்கள் புலம்பும் சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை.

மனோஜ்-விஜயா இருவரும் தனது வீட்டினர் அனைவருக்கும் தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டனர். சிந்தாமணி பைனான்சியரை வைத்து என்ன நினைத்தாரோ அதை செய்துவிட்டார்.

வீட்டை ஜப்தி செய்யப்போவதாக நோட்டீஸ் ஒட்ட இப்போது அண்ணாமலை குடும்பமே அங்கங்கே தங்கிவிட்டனர். அண்ணாமலை மீனா அம்மா வீட்டில் சந்தோஷமாக இருந்தாலும் விஜயா ஸ்ருதி வீட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், ஸ்ருதி வீட்டில் ஒரு பார்ட்டி நடக்கிறது, மது அருந்தி பாட்டு பாடி ஜாலியாக இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு விஜயாவை ஸ்ருதி அம்மா வரவழைத்து நடனம் ஆட வர்புறுத்துகிறார்கள்.

அந்த சம்பவம் விஜயாவிற்கு கடும் துயரத்தை கொடுத்துவிட்டனர், தனது அறைக்கு வந்து இங்கே வந்து சிக்கிக்கொண்டோமே என கதறி கதறி அழுகிறார். 

இன்னொரு பக்கம், இந்த பிரச்சனையை வைத்து மனோஜை எப்படியாவது தனது கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என ரோஹினி எல்லா வேலையையும் செய்து வருகிறார். தனியாக ஷோரூமில் இருக்கும் மனோஜுடன் அங்கேயே தங்குகிறார் ரோஹினி. 

அங்கு இருவரும் ரொமான்ஸ் வேற செய்கிறார்கள். 

LATEST News

Trending News

HOT GALLERIES