விஜய் கூப்பிட்டால் போவீங்களா!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி சொல்லிட்டாரே..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் விஜய் அரசியல் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நடிகர் விஜய்யை தனக்கு ரொம்ப பிடிக்கும். அதே சமயம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் விஜய் பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் செல்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்கு வாய்ப்பில்லை என்று ஓபனாக பதிலளித்தார்.

திருமணம் குறித்த கேள்விக்கு, நல்ல முகூர்த்தம் நாளும் மாப்பிள்ளையும் ரெடி என்றால் திருமணத்திற்கு நான் ரெடி. இங்கு நல்ல மாப்பிள்ளை உள்ளார்களா? என்று கேட்டபோது கரண்ட் கட்டானதால், இங்கு நல்ல மாப்பிள்ளை இல்லையோ என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.