உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை

சீரியலில் கம்பீரமாக இருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், உயிர் பிரியும் முன்பு நடந்த விடயங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து

கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

 

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை | Ethirneechal Marimuthu Before Death Car Drive

டப்பிங் அறையில் நடந்தது என்ன?

நடிகர் மாரிமுத்து எப்பொழுது நேரத்தினை சரியாக கடைபிடிப்பவர் என்பதால் காலை 6.30 மணிக்கு டப்பிங் செய்ய வந்துள்ளார். வரும் போது ஆரோக்கியமாக வந்தவர் 8 மணி வரை கம்பீரமான குரலில் டப்பிங் செய்துள்ளார்.

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை | Ethirneechal Marimuthu Before Death Car Drive

பின்பு சற்று அசௌகரியமாக உணர்ந்ததால் ஒரு 10 நிமிடம் பிரேக் கேட்டுள்ளார். டப்பிங் அறையில் இருந்தவரும் சரி என்று கூறியுள்ளார். உடனே ஏசியை ஆன் செய்துவிட்டு Sound Engineer வந்து மாரிமுத்துவை அழைப்பதற்கு வெளியே வந்துள்ளார்.

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை | Ethirneechal Marimuthu Before Death Car Drive

நெஞ்சுலியுடன் கார் ஓட்டிய மாரிமுத்து

 

 

ஆனால் வந்து பார்த்த போது மாரிமுத்துவைக் காணவில்லை. அவர் காரை எடுத்தக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளதை அறிந்து பின்னே சென்றுள்ளனர்.

உடனே வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவமனைக்கு செல்ல ஒரு 100 மீற்றர் இருந்த நிலையில், மூச்சுவிடுவதில் அதிக சிரமம் இருந்ததால், கார் ஓட்ட முடியாது என்று நினைத்து காரை அங்கேயே நிறுத்தியுள்ளார்.

 

 

பின்பு நடந்து, அங்கிருந்த செவிலியரை பார்த்து தனக்கு முடியவில்லை என்று கூறவே, தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் இருக்கும் மாரிமுத்துவின் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை | Ethirneechal Marimuthu Before Death Car Drive

LATEST News

Trending News

HOT GALLERIES