அழகோ அழகு.. நயனுடன் விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் புகைப்படம்.. கவிதையாக ஒரு பதிவு..!

அழகோ அழகு.. நயனுடன் விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் புகைப்படம்.. கவிதையாக ஒரு பதிவு..!

 

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் அழகிய கவிதை வடிவ கேப்ஷனையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் நயன்தாரா எந்த சமூக வலைதளத்தில் இல்லை என்றாலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன் நயன்தாராவுடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு, அமைவது அழகு.. அதிசயம் அற்புதம் அதுவே.. என்று கவிதை வடிவில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES