திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா..!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75, இறைவன், டெஸ்ட் என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படத்திற்காக ரூ. 10 கோடி வரை நயன்தாரா சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தியுள்ளாராம்.
இதுவரை ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த நயன் இதன்பின் தான் நடிக்கவுள்ள படங்களுக்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.