நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 செய்த விசயங்களை மக்களை மறந்திருக்க மாட்டார்கள் தானே. இந்நிகழ்ச்சிக்கு முன்பே அவர் மீது சில சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் அவர் அதிகமானது என்றே சொல்லலாம்.
நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 செய்த விசயங்களை மக்களை மறந்திருக்க மாட்டார்கள் தானே. இந்நிகழ்ச்சிக்கு முன்பே அவர் மீது சில சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் அவர் அதிகமானது என்றே சொல்லலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யா, விஜய் மற்றும் அவர்களின் மனைவியை தரக்குறைவாகவும், மரியாதை குறைவாகவும் பேச பெரும் பிரச்சனையானது. சம்மந்தப்பட்ட நடிகர்கள் பொறுத்துக்கொண்டாலும் அவர்களின் ரசிகர்கள் சும்மா விடுவதாக இல்லை. மீரா மிதுனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறி பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.
மறுபக்கம் சென்னை கமிஷனரையும் டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.
என் முகத்தை திருடிவிட்டார்கள். எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இது தான் நிலைமை. நான் மிகவும் நல்ல பெண். எந்த தவறும் செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் பழனிச்சாமி தான் காரணம். எனக்காக யாருமே குரல் கொடுக்கவில்லை.
சித்ரா போல நான் சாகமாட்டேன். எனக்குள் இருக்கும் வலி அதிகமாகிவிட்டது. என்ன முடியவில்லை. என்னிடம் பிரச்சனை செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன்.
இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லை. எல்லா ஐடி கார்டுகளை தூக்கி எறிகிறேன் என கூறியுள்ளார்.