ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்.... பிக்பாஸ் அல்டிமேட்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்.... பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. 18 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், பாவ்னி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.

 

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். இதற்கான புரமோவும் கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

 

பிக்பாஸ் அல்டிமேட்

 

இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். இது ரசிகர்களிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES