கிரிக்கெட் மட்டைய சாப்பிடுவியா? சச்சினுக்கு கேள்வி எழுப்பிய தமிழ் நடிகை!

கிரிக்கெட் மட்டைய சாப்பிடுவியா? சச்சினுக்கு கேள்வி எழுப்பிய தமிழ் நடிகை!

கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா சச்சின்? என சச்சினுக்கு கேள்வியெழுப்பிய தமிழ் நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

பாப் பாடகி ரிஹானா உள்பட பல வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் சச்சின் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரனாவத் உள்பட பல திரையுலக பிரபலங்களும் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி கடந்த 2 நாட்களாக சச்சினுக்கு எதிராகவும் சமூகவலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சச்சினுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் நடிகை ரோகினி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சச்சினுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். ‘கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா சச்சின்? அதுவும் ஒரு விவசாயி வளர்த்த மரத்தில் இருந்து தான் வந்தது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகை ரோகினியின் இந்த பதிவுக்கு வழக்கம்போல் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES