விஜய் டிவியில் இருந்து வெளியேறி, முன்னணி சேனலுக்கு மாறிய வனிதா!

விஜய் டிவியில் இருந்து வெளியேறி, முன்னணி சேனலுக்கு மாறிய வனிதா!

நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இல் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் கிடைத்த பிரபலத்தின் காரணமாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும், போட்டியாளராக இருந்த வனிதாவுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக வனிதா, அந்த நிகழ்ச்சியிலிருந்து மட்டுமின்றி விஜய் டிவியில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் வனிதாவுக்கு ஒருசில புதிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. பிரசாந்த் நடித்துவரும் ’அந்தகன்’, பவர்ஸ்டார் சீனிவாசனுடன் ’பிக்கப் டிராப்’ மற்றும் வசந்தபாலன் இயக்கும் படம் என திரையுலகில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர் தொலைக்காட்சியில் வனிதா இணைந்துள்ளார். அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’கன்னித்தீவு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வனிதா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கன்னித்தீவு’ நிகழ்ச்சியில் ஏற்கனவே ஷகிலா, மதுமிதா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர் என்பது தெரிந்ததே.

LATEST News

Trending News

HOT GALLERIES