மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து விலகியது ஏன்? பிரபல நடிகையின் சகோதரர் விளக்கம்

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து விலகியது ஏன்? பிரபல நடிகையின் சகோதரர் விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்பதும் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் மொத்தம் 12 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் பின்வருமாறு: 1. சரத் மற்றும் கிருத்திகா 2. ஷங்கர் மற்றும் தீபா 3. யோகேஷ் மற்றும் நந்தினி 4. வினோத் மற்றும் ஐஸ்வர்யா 5. யுவராஜ் மற்றும் காயத்ரி 6. அஜய் மற்றும் ஆனந்தி 7. திவாகர் மற்றும் அபிநயா 8. ஜாக் மற்றும் ரோஷினி 9. மணிகண்டன் மற்றும் ஷோபியா 10. வேல்முருகன் மற்றும் கலா 11. ராஜ்மோகன் மற்றும் கவிதா 12. கோபி மற்றும் ஹரிதா.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து அஜய் மற்றும் ஆனந்தி, வேல்முருகன் மற்றும் கலா, கோபி மற்றும் ஹரிதா ஆகிய ஜோடிகள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் திடீரென மணிகண்டன் - சோபியா ஜோடி இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமாகவே வெளியேறி விட்டதாக தெரிகிறது.

இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’தாமதமாக விளக்கம் அளிப்பதற்கு மன்னிக்கவும், என்னுடைய இன்பாக்ஸ் முழுவதும் நீங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என பல கேள்விகள் நிறைந்து உள்ளது. எனக்கு சில உடல்நல பிரச்சனை உள்ளது. இதனால் மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளேன். ஆனால் கண்டிப்பாக வைல்ட்கார்டில் மீண்டும் நாங்கள் வருவோம்’ என்று கூறியுள்ளார்.

மணிகண்டன் பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்ய ராஜேஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES