உடல்நிலை தேறிய பின் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம், முக்கிய இயக்குனர் கூறியது..!
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் "நான் ரஜினியுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். ஆறு மாதங்களுக்கு முன் அவரிடம் ராணா கதையை முழுமையாக கூறினேன்.
அவருக்கு கதை ரொம்ப பிடித்து போனதால், அவரின் உடல்நிலை நன்றாக தேறிய பின் அந்த படத்தை பண்ணுவதாக கூறினார். அந்த நாளுக்காக நான் காத்துகொண்டு இருக்கிறேன்" என கூறியுள்ளார்.