நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராஜை கொன்றது இவர்தானா?- கசிந்த ரகசியம்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது.
பாசம், சண்டை, காதல், காமெடி, ஏமாற்றம், அழுகை என எல்லாம் கலந்த கலவையாக சீரியல் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது சீரியலில் அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஒவ்வொரு நாளும் முத்துராஜை கொன்றது யார் என்ற மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்ந்துகொண்டே வருகின்றன.
தற்போது என்ன பரபரப்பான தகவல் என்றால் வெளிவந்த புரொமோவை வைத்து பார்க்கும் போது முத்துராஜை கொன்றது காயத்ரி தான் என கூறி வருகின்றனர்.
அவர் தான் நிஜ கொலையாளியா இல்லை வேறொரு மர்மம் அவரது கொலையில் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.