செம கொண்டாட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழுவினர்- என்ன விஷயம் தெரியுமா?
விஜய் டிவி சீரியல்களில் டாப் 1,2 வரிசையில் இல்லை என்றாலும் மக்களின் பெரிய ஆதரவை பெற்று வருகிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.
குடும்பம், பாசம், காதல், கலாட்டா என மொத்தம் கலந்த கலவையாக இந்த சீரியல் உள்ளது. கடந்த சில வாரங்களாக சீரியலில் பல அதிரடி திருப்பங்கள், மர்மங்கள் என இருக்கிறது.
முத்துராசுவை கொன்றது யார் என்ற ஒரே கதையில் சில வாரங்கள் சீரியல் ஓடுகின்றன
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குழுவினர் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். காரணம் இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு 250 எபிசோடுகளை கடந்துவிட்டதாம்.
இதனால் சீரியல் குழுவினருக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.