பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளை அருகில் அறுவை சிகிச்சை: உருக்கமான பதிவு

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளை அருகில் அறுவை சிகிச்சை: உருக்கமான பதிவு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா என்பதும் அன்பு தான் ஜெயிக்கும் என்று உறுதியாக நம்பிய அவர் அன்பு குழுவின் தலைவியாக இருந்ததாகவும் பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் அர்ச்சனாவுக்கு தற்போது திடீரென அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறியபோது ’நான் எப்போதும் என் இதயத்தில் இருந்து செயல்பட்டு வருவதால் எனது மூளை வருத்தமடைந்து, இதயத்தைவிட நான் சக்தி வாய்ந்தவன் என்பதை நிரூபிக்க காட்டியது போல் தெரிகிறது. இப்போது எனது மூளை அருகே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறேன்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை அருகே பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் ஜாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதி அளிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மன உறுதியுடன் மீண்டு வருவேன் என்று கூறியுள்ள அர்ச்சனா விரைவில் குணமாக நாமும் பிரார்த்தனை செய்வோம்.

LATEST News

Trending News

HOT GALLERIES