ரூ.3.5 கோடி கொள்ளை: அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை!

ரூ.3.5 கோடி கொள்ளை: அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை!

கேரளாவில் ரூபாய் 3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது பிரச்சாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட 3.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது, இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 1.25 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பாக 19 பேர்கள் வரை கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த பணம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் தொகுதிக்கு செலவு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் சுரேஷ் கோபியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருடைய பணம்? என்பது சுரேஷ் கோபிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருடைய வாக்குமூலம் இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நடிகர் சுரேஷ்கோபி அஜித் நடித்த ’தீனா’ விக்ரம் நடித்த ’ஐ’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES