புதிய சீரியலை ஒளிபரப்பப்போகும் சன் டிவி- என்ன பெயர் தெரியுமா?
தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லாக் டவுன் பிறப்பித்துள்ளார்.
இதனால் சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, எனவே தொலைக்காட்சிகளிலும் சீரியல் ஒளிபரப்பு இல்லை.
எல்லா தொலைக்காட்சிகளிலும் சில சீரியல்களின் பழைய எபிசோடுகள், மகா சங்கமம் போன்றவற்றை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள்.
இந்த நேரத்தில் தான் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது வரும் மே 29ம் தேதி முதல் ஜோதி என்கிற புதிய சீரியல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.