பாக்கியலட்சுமி சீரியலால் நடிகர் கோபிக்கு ஏற்பட்ட சோகம்- அவரே இன்ஸ்டாவில் பதிவு

பாக்கியலட்சுமி சீரியலால் நடிகர் கோபிக்கு ஏற்பட்ட சோகம்- அவரே இன்ஸ்டாவில் பதிவு

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் வில்லி, வில்லன் என யாரும் இல்லை.

ஆனால் இந்த சீரியலில் மக்கள் அனைவராலும் வெறுக்கப்படுபவர் கோபி என்கிற சதீஷ். இவர் தனது மனைவியை எப்போதும் வெறுத்துவிட்டு கள்ளக் காதலியுடன் ஊர் சுற்ற விரும்புகிறார்.

அது அவரது கதாபாத்திரம் இயக்குனர் கூறுவதை நடிக்கிறார். ஆனால் அவர் நடிப்பதை நிஜமாக எடுத்துக் கொண்டு நிறைய பேர் அவரை இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் தவறான வார்த்தைகளால் திட்டி வருகிறார்களாம்.

கோபியும் தனது இன்ஸ்டாவில் இது கதை, இயக்குனர் கூறுவதை தான் நடிக்கிறேன், ஏன் திட்டுகிறீர்கள் என வீடியோ வெளியிட்டார்.

இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து நிறைய மோசமான மெசேஜ் வருகிறதாம், அவர்களுக்கு எல்லாம் என்னுடைய பதில் இதுதான் என மாஸ்க் போட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

A post shared by Sathish (@sathish_artist05)

LATEST News

Trending News

HOT GALLERIES