இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்ததாக இந்த முக்கிய நடிகரின் திரைப்படத்தை தான் இயக்கவிருந்தாரா? வருத்தத்தில் ரசிகர்கள்

இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்ததாக இந்த முக்கிய நடிகரின் திரைப்படத்தை தான் இயக்கவிருந்தாரா? வருத்தத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியவர் தான் கே.வி.ஆனந்த். இவரின் ஒளிப்பதிவில் காதல் தேசம், முதல்வன், நேருக்கு நேர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 அதனை தொடர்ந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் அயன், கோ, கவண் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக செய்தி வெளியானது, இதனால் திரையுலகை சேர்ந்த பலரும் அவரின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடைசியாக இவர் இயக்கத்தில் காப்பான் திரைப்படம் வெளியாகிய நிலையில் அடுத்ததாக இவர் நடிகர் சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதற்கு முன் இவர்கள் இருவரும் கோ திரைப்படத்தில் பணியாற்ற வேண்டியது. ஆனால் அப்படம் ஜீவா நடிப்பில் வெளியானது.

LATEST News

Trending News

HOT GALLERIES