கைவிடப்பட்ட சூர்யா-மாரி செல்வராஜ் திரைப்படம், அதற்கு பதிலாக மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி
இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார், இவரின் திரைப்படங்கள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்தாக மாரி செல்வராஜ் சூர்யாவை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது.
ஆனால் தற்போது சூர்யா-மாரி செல்வராஜ் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், அதற்கு பதிலதாக மீண்டும் தனுஷ்- மாரி செல்வராஜ்- கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.