'புஷ்பா' படத்திற்கு வில்லனாகும் பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு

'புஷ்பா' படத்திற்கு வில்லனாகும் பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் என்பவர் இயக்கி வரும் ’புஷ்பா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது ஆகஸ்ட் 13ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர், ஹீரோவுக்கு இணையான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் பிரபல ஹீரோ ஒருவரை தான் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்

முன்னதாக விஜய் சேதுபதி இந்த படத்தின் வில்லன் கேரக்டர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்

செம்மரக்கடத்தல் சம்பந்தமான கதையம்சம் கொண்ட இந்த படம் அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES