நிகழ்ச்சி மேடையில் சோக கதையை கூறி கண்ணீர்விட்டு அழுத பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி
விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து நிறைய புதுபுது நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
Old is Gold, சீரியல் கொண்டாட்டம் என நிறைய நடக்கின்றன. இப்போது எங்க வீட்டு மகாலட்சுமி என்று ஒரு நிகழ்ச்சி.
இதில் சீரியல் நாயகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் புரொமோ வெளியாக பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி தான் இந்த இடத்திற்கு வர பெரிய கஷ்டப்பட்டதாக அழுதுகொண்டே கூறுகிறார்.
இவர் மட்டும் இல்லை மற்றும் சில நடிகைகளும் இந்த இடத்தை பிடிக்க என்னவெல்லாம் வாழ்க்கையில் சந்தித்தேன் என கூறுகின்றனர்.