தப்பு தப்பா பேசுனாங்க.. இளம் நடிகைக்கு துரோகம் செய்த வாணி போஜன்..!
சின்னத்திரை சீரியல்களில் நடித்து, பின்னர் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர்கள் வரிசையில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன்.
'தெய்வமகள்' சீரியலில் நடித்து "சின்னத்திரை நயன்தாரா" என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வாணி போஜன், 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நிலவும் பெரிய ஹீரோயின், சின்ன ஹீரோயின் பாகுபாடு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சினிமாவில் பாகுபாடு நிலவுவது குறித்து வாணி போஜன் கூறுகையில், "நிச்சயமாக இருக்கு, ஆனால் ஏன் இந்த பாகுபாடு இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் மிகப்பெரிய நடிகையாக வரணும்னா அதுக்கு நிச்சயமா ஒரு கடுமையான உழைப்பு தேவை. வெறும் நடிப்பை மட்டும் நம்பி நடிச்சா பெரிய நடிகையாக முடியாது.
அதற்கான சில திறமைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று சினிமா துறையில் நிலவும் யதார்த்தத்தை சுட்டிக்காட்டினார். மேலும், "கொஞ்சம் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சிறப்பாக நடித்தால் நிச்சயம் பெரிய நடிகையாகலாம், அதுமட்டுமின்றி கொஞ்சம் அதிர்ஷ்டமும் (லக்) வேண்டும்.
எனக்கு வரும் எல்லா படத்திலும் நடிக்கணும், நல்ல சம்பாதித்து கார், பங்களா வாங்கி செட்டிலாக வேண்டும் என்று நான் எப்போதும் நடித்தது கிடையாது. எனக்கு பிடித்தமான கதைகளைத் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன்," என்று தனது சினிமா பயணத்தின் கொள்கையை அவர் வெளிப்படுத்தினார்.
தனக்கு வந்த வாய்ப்பு ஒன்று கை நழுவிப்போன அனுபவத்தை பகிர்ந்துகொண்ட வாணி போஜன், "அப்படித்தான் இயக்குநர் ஒருவர் போனில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அந்த கதையை கேட்டுவிட்டு இது எனக்கு செட்டாகாது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அந்த கதையை அந்த இயக்குநர் ரித்திகா சிங்கிடம் சொல்லி இருக்கிறார். அது எனக்கு தெரியாது, அந்த கதை கேட்ட ரித்திகா, ஓகே சொல்லிவிட்டார். அதன்பின், என்னுடைய தோழி எனக்கு போன் செய்து ஏன் அந்த கதை வேண்டாம் என மறுத்தாய் அது நல்ல கதை ஆச்சே.. என்று திட்டினால்.
அதன் பிறகு, அந்த இயக்குனரை நேரில் வர வைத்து கதையை கேட்டேன். அவர் போனில் சொன்னதை விட நேரில் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக இருந்து ஓகே என்று கூறினேன்.
ஆனால், நீங்க ஓகே சொல்லவில்லை என்றால் இன்னைக்கு ரித்திகாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்க வேண்டியது என்று அவர் என்னிடம் சொன்னதும் அதிர்ச்சியாகி விட்டேன். அதன் பிறகு, அய்யோ சார்.. நான் அவங்க பொழைப்பை கெடுத்த மாதிரி ஆகிடும்.. துரோகம் பண்ண மாதிரி ஆகிடும்.. ரித்திகா சிங்கை நீங்கள் புக் பண்ணிக்கோங்க.. என்று கூறினேன். ஆனால், நீங்களே நடிங்க என்று கூறி விட்டார்.. அப்படி பலமுறை நடந்துள்ளது," என்று தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய வாணி போஜன், "சோசியல் மீடியாவில் மோசமான செய்திகள், கமெண்ட்ஸ்கள் சில நேரம் பார்க்கும் போது ஆத்திரமாக இருக்கும்.
என்னோ கூடவே இருந்து பார்த்த மாதிரி பல விஷயங்களை தப்பு தப்பா எழுதுவார்கள், பேசுவார்கள். அதைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கும், ஆனால் அதையெல்லாம் நான் கடந்து வந்துவிட்டேன்.
எழுதுறியா எழுது, பேசுறியா பேசு, நான் ஹாப்பியாகத்தான் இருக்கிறேன்," என்று சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு கூலாக பதிலடி கொடுத்தார். வாணி போஜன் சினிமா துறையில் நிலவும் பாகுபாடு குறித்தும், தனது கதை தேர்வு முறை குறித்தும், சமூக வலைத்தள விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.