"செக்ஸியான போட்டோ அனுப்புங்க.." என்று கேட்ட ரசிகர் - மஞ்சிமா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். 

 

பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

 

பின்னர் விக்ரம் புறப்புக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

 

அதில் "மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் பண்ணுகிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே" என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது: "சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நானும் 'குயின்' ரீமேக்கில் நடித்துள்ளேன். 

 

ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படம் மலையாளத்தில், தமிழ் படம் தமிழில், தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும். வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை". இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்திருந்தார்.

 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது உங்களோட செக்ஸியான போட்டோ ஒன்றை அனுப்புங்கள் என்று கேட்க எனக்கு பிடித்த செக்ஸியான போட்டோ இது தான் என்று தன்னுடைய குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES