வாய்ப்பு கொடுக்கிறேன் என் ரூமுக்கு வா.. என அழைத்த இயக்குனர் இவர் தான்..! பெயருடன் கூறிய நடிகை ஷகிலா..!
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்.
அதோடு, ஒரு திருநங்கையையும் அவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், யுடியூப் சேனல்களில் சர்ச்சையில் சிக்குபவர்களை பேட்டியும் எடுத்து வருகிறார். ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாட்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவுக்கும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார்.
சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது நான் செய்த தவற்றை இல்லை என்று கூறுவதால் என்ன நடக்க போகிறது.\
நான் செய்ததை ஆமாம் நான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு பயமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் விசித்ராவுக்கு நடந்த பாலியல் சம்பவம் பற்றி எனக்கு தெரியும் என்றும் சக நடிகையாக அவருடன் நான் பயணித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு நேர்ந்த பாலியல் தில்லை குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் நடிக்கும் போது நடிகர் அல்லரி நரேஷின் தந்தையும் இயக்குனருமான E. V. V சத்தியநாராயணன், என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததார்.
என் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி என் அறைக்கு வா என்று கூறினார். நான் உங்கள் படத்தில் நடித்துவிட்டேன், என் சம்பளமும் வந்துவிட்டது. உங்களின் அடுத்த படத்தில் எனக்கு நடிக்கவிருப்பவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.