என் மகளுக்கு பூம்ராவோடு திருமணமா? நடிகை அனுபமாவின் தாயார் பதில்!

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் பூம்ராவுக்கும் இடையே திருமணம் நடக்க போவதாக வெளியாகும் தகவல்களை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் பூம்ராவுக்கும் இடையே திருமணம் நடக்க போவதாக வெளியாகும் தகவல்களை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதையடுத்து 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்து வரும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்காக அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஐபிஎல் மற்றும் ஆஸி தொடரால் பூம்ராவுக்கு மேலும் வேலைப்பளு கொடுக்கவேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பூம்ராவின் விலகலுக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

பூம்ராவுக்கு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இப்போது அவர் விருப்ப விடுப்பு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் முன்னர் பூம்ராவின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எனக்கு இனிய விடுமுறை’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் பூம்ரா –அனுபமா காதல் துளிர்விட்டுள்ளதாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் அனுபமாவின் தாயார். இதுபற்றி அவர் அளித்துள்ள நேர்காணலில் ‘இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவர் பாலொ செய்வதை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்தியைப் பரப்புகிறார்கள். இதற்கு முன்னர் கூட இதுபோல பரப்பினார்கள். ஒருமுறை ஷூட்டிங்கின் போது அனுபமா பும்ராவை சந்தித்தார். ஆனால் இப்போது இதுபோன்ற செய்திகள் எப்படி வருகின்றன என்று தெரியவில்லை. இப்போது அனுபமா ராஜ்கோட்டில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளார்’ எனக் கூறியுள்ளார்

LATEST News

Trending News

HOT GALLERIES