கண்ட்றோல் பண்ணா விவாகரத்து.. அந்த நடிகரை மிரட்டி காரியம் சாதிக்கும் நடிகை..!

கண்ட்றோல் பண்ணா விவாகரத்து.. அந்த நடிகரை மிரட்டி காரியம் சாதிக்கும் நடிகை..!

திரை உலகில் ரீல் ஜோடியாக நடிக்கும் பல நடிகர் மற்றும் நடிகைகள் ரியல் லைஃபில் ஜோடியாக மாறியதை அடுத்து இவர்கள் வாழ்க்கையில் ஜொலித்தார்களா? என்றால் கேள்வி குறி தான் ஏற்படும்.

மேலும் அப்படி நட்சத்திர ஜோடிகளாக ஜொலிக்க கூடிய ஜோடிகள் குழந்தை குட்டி என்று சந்தோஷத்தோடு வாழ்வது கானல் நீராகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நட்சத்திரங்களின் மத்தியில் அதிகரித்து இருக்கும் விவாகரத்துக்கள் மட்டுமல்லாமல் பிள்ளை குட்டி பெற்ற பின்பும் அவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமையால் திருமண பந்தம் உடைந்து தனித்து வாழ்கின்ற சூழ்நிலைகள் உருவாகிறது.

அந்த வகையில் தற்போது நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த ஜோடிகளுக்கு மத்தியில் விரிசல் விழுந்ததை அடுத்து பாரம்பரிய குடும்பத்து வாரிசு நடிகரான அந்த நடிகர் கட்டினால் இந்த பெண்ணைத்தான் கட்டுவேன் என்று அடம்பிடித்து அந்த நடிகையை கரம் பிடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவு கணவன் வீட்டாரோடு ஒட்டி வாழ்ந்து வந்த இவருக்கு குழந்தைகள் பிறந்த பிறகு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தன் கணவரிடம் கூறியதை அடுத்து கணவன் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தாலும் எறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிக்கு ஏற்ப அடி மேல் அடி வைத்து கணவரிடம் தான் நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார்.

இதை அடுத்து பல படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கும் கணவர் வீட்டாருக்கும் மத்தியில் புகைச்சல் ஏற்பட தன் கணவனை பிரித்து அழைத்து தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

அங்கு சென்றதும் அம்மணியை கையில் பிடிக்க முடியாத அளவு கிளாமர் உடை பார்ட்டி என பழைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சர்ச்சையான கேரக்டர்களாக இருந்தாலும் நடிக்க தயாராகி விட்டது போல அவருடைய உடை நாகரிகம் தற்போது முகம் கூச வைத்துள்ளது.

இதனை அடுத்து கணவனுக்கு இது சுத்தமாக பிடிக்காமல் போக அந்த வெளிச்ச நடிகர் தன் மனைவியை கட்டுப்படுத்தினால் விவாகரத்து செய்துவிடுவேன் என்று அதிரடியாக பேசி வருகிறார்.

பிள்ளைகள் வளர்ந்து ஆளான நிலையில் இது போன்ற புது தொல்லை தேவையா என்று யோசித்த அந்த வெளிச்சம் நடிகர், பூ நடிகை போடும் ஆட்டத்தை கண்டும் காணாமல் அமைதியாக இருக்கிறார்.

பொது வழிகளில் இருவரும் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆளுக்கு ஒரு திசையில் தான் இருக்கிறார்களாம்.

இதை அடுத்து அந்த வெளிச்ச நடிகரின் நிலையை எண்ணி கோடம்பாக்கம் வட்டாரத்தில் இப்படி பூ நடிகை வெளிச்ச நடிகரின் காலை வாரி விட்டாரே என்ற பேச்சு புகைந்து வருகிறது.

மேலும் அந்த வெளிச்ச நடிகர் கட்டுப்பாட்டை மீறி பூ நடிகை எல்லாவற்றையும் செய்து வருவதால் பிரச்சனை எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் அந்த நடிகரின் குடும்பம் வாய்மூடி மௌனம் சாதித்து வருகிறது.

இதை அடுத்து இந்த விவகாரமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES