டாப்சி & அனுராக் காஷ்யப் : 300 கோடி கணக்கில் காட்டாத பணம்?

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் மறைத்ததாக அதிகாரிகள் தகவல்.

நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் மறைத்ததாக அதிகாரிகள் தகவல்.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பேசியது சிலசமயம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப்-ம் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இருவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து டாப்சி ரூ.5 கோடி ரொக்கம் வாங்கியதாகவும், அனுராக் காஷ்யபின் Phantom Films போலி பில்கள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் மறைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல். 

LATEST News

Trending News

HOT GALLERIES