என் கணவர் அந்த விஷயத்தில இப்படி தான் இருக்கணும்.. இந்த வயசுல நடிகையின் ஆசையை பாத்திங்களா..

என் கணவர் அந்த விஷயத்தில இப்படி தான் இருக்கணும்.. இந்த வயசுல நடிகையின் ஆசையை பாத்திங்களா..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது பெரியது துவங்க ஆரம்பித்த போதே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

முதல் முதலில் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் வேடிக்கை பார்ப்பதற்காக வந்த ஜான்விகபூரை அங்கிருந்த மீடியாக்கள் சுற்றி வளைத்து படம்பிடிக்க இவர் அடுத்த ஹீரோயின் என்பதை மீடியாக்களில் வெளியிட்டனர்.அதன் பின்னர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு படையெடுத்து உங்கள் மூத்த மகளை திரைப்படங்களில் நடிக்க வைக்கிறீர்களா என கேட்க ஆரம்பித்தார்கள்.

அதன் மூலம் தடக் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இந்தி சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். மகளை மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக உயர்த்த வேண்டும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தார்.

ஆனால், ஆனால் துரதிஷ்டவசமாக முதல் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்னதாகவே நடிகை ஸ்ரீதேவி மரணித்துவிட்டார்.

இவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்தது என்று சொல்லலாம். துபாயில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்ற அவர் அங்கு மர்மமான முறையில் மறைந்து கிடந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால் விளம்பரங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதனுடைய காதலனுடன் திருப்பதி கோவிலுக்கு விசிட் அடிப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்.தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து அதிக ஆர்வத்தை காட்டி வரும் நடிகை ஜான்வி கபூர்,

தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது ஹீரோயினாக நடித்த பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுசில்குமார் பேரனும் நடிகருமான ஷிகர் பஹாரியை ஜான்விகபூர் காதலித்து வருகிறார்.

அவ்வப்போது அவருடன் டேட்டிங் செல்வது விசிட் அடிப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அவரது தந்தையான போனி கபூரும் அண்மையில் ஜான்விகபூர் ஷிகர் பஹாரியை காதலிப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு நடிகை ஜான்விகபூர் பல விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேட்டி பேசியிருக்கிறார்.

என் திருமணம் இரு வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் ரகசியமாகத்தான் நடைபெறும்.

காரணம் எனக்கு நிறைய கூட்டத்தை பார்த்தால் பயமாக இருக்கும். எல்லோரும் என்னை பார்ப்பார்கள் என்ற ஒரு அச்சம் இருக்கும் 

அதனால் எனக்கு நெருக்கமானவர்களின் முன்னிலையில் மட்டும் திருமணத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.

திருமண சமயத்தில் காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ வைத்து நான் இருப்பேன். என் கணவர் வேஷ்டியில் தான் இருக்க வேண்டும்.

பிறகு விருந்துக்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் வாழை இலையில் வைத்து உணவு பரிமாறி திருமண விருந்து கொடுக்க வேண்டும் என்று ஜான்வி கபூர் திருமண ஆசைகளை அடுக்கடுக்காக கூறினார்.

நடிகை ஜான்வி கபூருக்கும் ஷிகர் பஹாரிக்கும் விரைவில் திருமணம் செய்ய இருவீட்டார் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News