கல்யாணத்துக்கு பிறகு ஆறு மாசம் இரவில் தூங்க கூட விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!

கல்யாணத்துக்கு பிறகு ஆறு மாசம் இரவில் தூங்க கூட விடாமல் டார்ச்சர்.. சாந்தினி ஓப்பன் டாக்..!

2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் ஒரு அழகு போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து அப்பொழுது கொஞ்சம் பிரபலமாக இருந்தார்.

இந்த நிலையில் அவரது புகைப்படம் எப்படியோ இயக்குனர் பாக்யராஜுக்கு கிடைத்திடவே தனது மகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் இவரை  கதாநாயகி ஆக்கி விடலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ் இதனை அடுத்து சாந்தினிக்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்யராஜ்.

சித்து பிளஸ் 2 திரைப்படம் ஓரளவு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் அதற்குப் பிறகு இவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் எல்லாமே பெரிதாக வரவேற்பு பெறாத திரைப்படங்களாக இருந்தன.

வில் அம்பு, மன்னர் வகையறா,  பில்லா பாண்டி என்று இவர் நடித்த திரைப்படங்களில் வில் அம்பு திரைப்படம் மட்டும் கொஞ்சம் பேசப்படும் திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதாக பேசப்படும் திரைப்படமாக இருக்கவில்லை.

அதனால்தான் இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தும் கூட இன்னமும் த்ரிஷா நயன்தாரா மாதிரி மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இவர் தெரியவில்லை. இதற்கு நடுவே சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

பொதுவாகவே கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. ஏனெனில் கதாநாயகிகளுக்குதான் இங்கு அதிகமாக போட்டிகள் இருந்து வருகின்றன.

மாடல் துறையில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தொடர்ந்து  கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளை செய்து வருவதால் புது முகங்கள் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள். அதனால் பழைய நடிகைகள் சிறிது காலத்திலேயே ஃபீல்ட் அவுட் ஆகி விடுகின்றனர்.

அந்த வகையில் வாய்ப்புகள் குறைவாக துவங்கிய பிறகு நடிகை சாந்தினி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சீரியல்களிலும் தொடர்ந்து அவரால் முழுமூச்சாக செல்ல முடியவில்லை. திரும்ப சினிமாவிற்கு வந்து இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது  அவரது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ”எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆன பிறகும் கூட என் கணவர் தினமும் என்னை தூங்க விட மாட்டார் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதற்கு விளக்கம் கொடுத்த அவரது கணவர் கூறும் பொழுது படப்பிடிப்பு முடித்துவிட்டு தினமும் நான் தாமதமாகதான் வீட்டிற்கு வருவேன் அப்பொழுது அவர் தூங்குவதை மறந்து விட்டு நான் கதவுகளை வேகமாக திறப்பது சாத்துவது போன்றவற்றை செய்வேன். இதனால் அவருக்கு தூக்கத்தில் இடையூறு ஏற்படும்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் சாந்தனியின் கணவர் நந்தா.

LATEST News

Trending News

HOT GALLERIES