என் வாயில் Acid ஊத்தியதால் அந்த இடம்!! ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை கூறிய நடிகை கலாரஞ்சனி..

என் வாயில் Acid ஊத்தியதால் அந்த இடம்!! ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை கூறிய நடிகை கலாரஞ்சனி..

தமிழ் சினிமாவில் 80, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கலாரஞ்சனி. நடிகை ஊர்வசி மற்றும் கல்பனாவின் சகோதரியான கலாரஞ்சனி தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார்.

 

சின்னத்திரை சீரியல்களிலும் கவனம் செலுத்தி நடித்து வந்த கலாரஞ்சனி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். சமீபத்தில் மறைந்த நடிகை கலபனாவின் மகளுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். உங்கள் குரலுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தனக்கு சின்ன வயதில் இருந்து பாப்பிலோமா என்ற பிரச்சனை இருந்தது. மரு என்னுடைய மூச்சுக்குழாயில் வந்து அதன்பின் ஒரு வயதானப்பின் நின்றுவிடும். அதன்பின் நடிக்க வந்த போது என் வாயில் ஆசீட் விழுந்தது. அது எப்படி என்றால், தேங்காய் எண்ணையில் தான் ரத்தத்தை கலந்து வைப்பார்கள்.

மேக்கப்மேன் அதில் ஆசீட் கலந்து வைத்துவிட்டார். அதை வாயில் ஊற்ற வேண்டியதாகிவிட்டது. வாயில் ஊற்றியதும் எரிய ஆரம்பித்து, மூச்சுக்குழாய் ட்ரைய் ஆகிவிட்டதால் என் குரலுக்கு பிர்ச்சனை ஏற்பட்டது. அது வேண்டும் என்று பண்ணவில்லை, தெரியாமல் செய்துவிட்டார். எனக்கு அது விதியாக மாறிவிட்டது என்று நடிகை கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES