கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை தீபிகா படுகோனுக்கு நேர்ந்த விஷயம், மர்ம பெண் செய்த பரப்பு காரியம்..!
நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகை தீபிகா படுகோனே டின்னர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார், அவர் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது பெண்கள் கூட்டம் அவரை சூழ்ந்துள்ளது.
மேலும் தீபிகாவை சூழ்ந்த அந்த பெண்கள் அவரிடம் சில பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். அதில் ஒரு பெண் தீபிகாவின் கவனத்தை பெறுவதற்காக அவரின் ஹேண்ட் பேகை பிடித்து இழுத்துள்ளார்.
இதனை சுதாரித்து கொண்டு அவருடன் இருந்தவர்கள் தீபிகாவின் பேகை மீட்டு, வேகமாக அவரை காருக்குள் உட்கார வைத்து அனுப்பியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..