விஜய் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் ஏற்பட்ட சலசலப்பு - படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர்...
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என புனைப் பெயருடன் அழைக்கப்படுபவர் வடிவேலு. இவர் நடிகர் ராஜ்கிரணால் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
வடிவேலு முதன் முதலில் சாதாரண துணை நடிகராக வந்த பின் தனது நடிப்பு திறமையால் பெரும் நகைச்சுவை நடிகராக ஆனார். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைல் மற்றும் உடல் மொழியினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரை கோவப்படுத்தியாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "வில்லு". இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வடிவேலு, விஜய்க்கு இடையே காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது வடிவேலு விஜய்யை பார்த்து டயலாக் சொல்ல சொன்னால் எங்கோ பார்த்து பேசிக் கொண்டிருந்தாராம். இதனால் பிரபு தேவா பலமுறை கட் சொல்லியும் கேட்காத வடிவேலு தான் டப்பிங்கில் மேச்சு செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.