ஜாக்கெட் இல்லாத காட்சியில் நடிச்சது!! மனம் திறந்து பேசிய நடிகை நீலிமா..
சின்னத்திரை தொலைக்காட்சியிலும் வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நீலிமா ராணி. மெட்டி ஒலி, கோலங்கள், ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்த நீலிமா, பொன்ராம் இயக்கத்தில் ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் நடித்த நீலிமாவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அப்படத்தின் போது அவர் அளித்த பேட்டியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் அந்த காலக்கட்டத்தை தத்ரூபமாக காட்டும் விதமாக ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டுமே கட்டி நீலிமா நடித்திருப்பார். அக்காட்சிகளில் நடித்தது குறித்து நீலிமா ராணி விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதில் நீலிமா, எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ஏனென்றால் அப்போதுதான் எனக்கு குழந்தை பிறந்து 3, 4 மாதங்களாகியது. பாப்பா பிறந்த தருணத்தில்தான் நான் உடனே நடிக்க வந்துவிட்டேன். உடனே ருத்ரன்-ம் நடந்தது. இரண்டுமே எனக்கு ஒரே நேரத்தில்தான் நடந்தது.
பிரவசத்திற்குப்பின் மிகவும் விரைவாகவே இப்படங்கள் நடந்தது. அப்படி பார்த்தோம் என்றால் உதாரணத்திற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். இக்கேள்வி எழுப்பும்போதே இந்தியன் படத்தில் கமல்ஹாசன் தான் நினைவுக்கு வருகிறார். அவர்களை மிஞ்சும் அளவிற்கா நான் ஏதும் செய்துவிடப்போகிறோம். கண்டிப்பாக இல்லை, உங்கள் உணர்வுகளையும் நடிப்பையும் பார்க்கும்போதே இது ஒரு விஷயமே இல்லை என்று நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.