சாப்பிட்ட உடனே தூங்கிடறான், இவனெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்: 'தலைநகரம் 2' டிரைலர்..!

சாப்பிட்ட உடனே தூங்கிடறான், இவனெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்: 'தலைநகரம் 2' டிரைலர்..!

சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 17 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முதல் பாகத்தில் ரைட்டு என்ற கேரக்டரில் நடித்திருந்த சுந்தர் சி அதே கேரக்டரில் மீண்டும் மிரட்டும் படம் தான் ’தலைநகரம் 2’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மற்றும் ஒரே ரத்தம் கொலை போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதை அடுத்து ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகரம் படத்தின் முதல் பாகத்தை சிராஜ் இயக்கிய நிலையில் ‘தலைநகரம் 2’ படத்தை துரை இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, இருட்டு போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி, பாலக் லால்வாணி, யோகி பாபு ரவி மரியா, தம்பி ராமையா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News