ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காதது ஏன்?- முதன்முறையாக கூறிய சுகன்யா

ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காதது ஏன்?- முதன்முறையாக கூறிய சுகன்யா

80, 90களில் ரசிகர்களின் பேவரெட் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சகன்யா. 1991ம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

முதல் படமே படு சூப்பர் ஹிட் படமாக அமைய தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக நடித்து வந்தார். தமிழில் எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் மட்டும் படமே நடிக்கவில்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை சுகன்யா ரஜினியுடன் ஒரு படம் கூட நடிக்காதது குறித்து கூறியுள்ளார். 15 ஆண்டுகளாக பிஸியாக ஓய்வு இல்லாமல் நடித்த எனக்கு ரஜினியுடன் நடிக்க மட்டும் வாய்ப்பு அமையவில்லை.

ஒரு படப்பிடிப்பிற்கு செல்ல விமான நிலையம் சென்ற போது கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை சந்தித்தேன். என்னை அவர் பார்த்ததும் திட்டிவிட்டார், நீங்க எதுக்காக ரஜினி படத்துல நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

முத்து படத்தில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்துள்ளது ஆனால் இதுகுறித்து எனக்கு தெரியாமலேயே இருந்தது என கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES