மீண்டும் ஒரே படத்தில் ஐஸ்வர்யாராய்-த்ரிஷா...?

மீண்டும் ஒரே படத்தில் ஐஸ்வர்யாராய்-த்ரிஷா...?

மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்தனர் என்பதும் நந்தினி மற்றும் குந்தவை ஆகிய கேரக்டர்களில் இருவரும் மிக அபாரமாக நடித்திருந்தனர் என்பதும் குறிப்பாக இருவரும் சந்திக்கும் காட்சிகள் அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் அந்த படம் அஜித்தின் ’விடாமுயற்சி’ என்ற தகவல் தான் ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கேத்ரினா கைப், கங்கனா ரனாவத், த்ரிஷா ஆகிய ஐந்து பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இவர்களில் இரண்டு பேர் நாயகியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அஜித் இந்த திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அதனால்தான் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வரும் வரை பொறுமை காப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES