நீ பார்க்கும்போதும் பேசும்போதும் நெஞ்சில் மின்னல் கண்டேன்: 'வெந்து தணிந்தது காடு' சிங்கிள் பாடல்

நீ பார்க்கும்போதும் பேசும்போதும் நெஞ்சில் மின்னல் கண்டேன்: 'வெந்து தணிந்தது காடு' சிங்கிள் பாடல்

சிம்பு நடிப்பில், கவுதம் வாசு தேவன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் துவக்கப்பாட்ட நிலையில் முதல் கட்டமாக சற்றுமுன் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது

'காலத்துக்கும் நீ வேணும்’ என்ற இந்த பாடலை கவிஞர் தாமரை எழுத, சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மெலடி இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

என்ன தர உன்னை விட நம்பும் ஓரிடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

நீ வந்த, நிழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பார்க்கும்போதும் பேசும்போதும்
நெஞ்சில் மின்னல் கொண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு

LATEST News

Trending News

HOT GALLERIES